"தோனியுடனான பரிவர்த்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும் " - அமரபாலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடன் நடைபெற்ற பரிவர்த்தனை விவரங்களை தாக்கல் செய்ய அமரபாலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தோனியுடனான பரிவர்த்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும்  - அமரபாலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
x
கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடன் நடைபெற்ற பரிவர்த்தனை விவரங்களை தாக்கல் செய்ய அமரபாலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அமரபாலி நிறுவன விளம்பரத் தூதராக செயல்பட்டதற்காக தர வேண்டிய 40 கோடி ரூபாய், மற்றும் ராஞ்சியில் வீடு வாங்குவதற்காக அளித்த தொகையையும் அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம்  தோனியுடனான அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அந்த நிறுவனத்தின் மீது, வீடு வாங்குவதற்காக பணம் கட்டிய 46 ஆயிரம் பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்