போராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு

பெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.
போராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு
x
பெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது. முதலில் ஆடிய பெங்களூரு அணியில், பார்த்திவ் படேல் மட்டும் அரைசதம் கடந்தார். அவரை தொடர்ந்து மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த‌தால், 161 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த‌து. 162 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கி சென்னை அணி தொடக்க ஆட்டக்கார‌ர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுளை பறிகொடுத்தனர். இதை தொடர்ந்து வந்த ரெய்னாவும், முதல் பந்திலே வெளியேற சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் களமிறங்கிய தோனி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துசென்றார். இறுதி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள்  பறக்க விட்டார் கேப்டன் தோனி. ஆனால் இறுதி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், தாகூர் ரன்அவுட் செய்யப்பட்டார். தோனியின் அதிரடி ஆட்டம் வீணாக போனதாக ரசிகர்கள் சிலர் அதிருப்தி அடைந்த போதும்,  தனி ஆளாக தோனியின் பேட்டிங் அனைத்து நாட்டு ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்