இந்தியா Vs ஆஸி. 2வது ஒருநாள் போட்டி - 500வது வெற்றியை பெற இந்தியா தீவிரம்

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா Vs ஆஸி. 2வது ஒருநாள் போட்டி - 500வது வெற்றியை பெற இந்தியா தீவிரம்
x
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும், தீவிர பயிற்சி மேற்கொண்டனர். முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து, பதிலடி தரும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனிக்கு, காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது, ஆனால், வலைப் பயிற்சியில் அவர் பங்கேற்றதால், போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏதும் இல்லை எனத் தெரிகிறது. இந்தப் போட்டி இன்று மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்