இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய மகளிர் அணி 206 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மும்பையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 66 ரன்களும், பூனம் ராவத் 56 ரன்களும் எடுக்க, மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் 50 ஓவர் முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.
Next Story