நியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
நியூசி.யை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - இந்திய அணி கேப்டன் விராட் கோலி
x
நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். நேப்பியரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூசிலாந்து மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால், 300 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்த வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இமாலய இலக்கை எட்டும் போது பதற்றமடைய கூடாது என்று குறிப்பிட்ட கோலி, தாம் வியந்து பார்க்க கூடிய வீரர் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தான் என்று பாராட்டு தெரிவித்தார்.  ஐ.சி.சி.யின் மூன்று விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி என்றும், மேலும் சிறப்பாக செயல்பட விருதுகள் ஊக்கம் அளிக்கும் எனறும் கோலி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்