ஆஸி.க்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் : வலுவான நிலையில் இந்திய அணி

மெல்போர்ன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராடி வருகிறது.
ஆஸி.க்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் : வலுவான நிலையில் இந்திய அணி
x
இந்திய அணிக்கு எதிராக, மெல்போர்னில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய வீரர் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி வீர‌ர் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆட்டமிழந்து உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  

292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, ஃபாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்சில் களமிறங்கியது.  இந்திய அணி வீரர்களும் பேட்டிங் செய்ய முடியாமல் திணறினர். 8 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய  அணி டிக்ளேர் செய்த‌து. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 399 ரன்கள் என்ற இலக்குடன் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில், அந்த அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை மட்டுமே எடுத்தது. நாளை ஒருநாள் மட்டும் உள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்