ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவிலிருந்து மாற்றம்? - 2019-மக்களவை தேர்தல் நடைபெறுவதால் சிக்கல்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால், ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவிலிருந்து மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவிலிருந்து மாற்றம்? - 2019-மக்களவை தேர்தல் நடைபெறுவதால் சிக்கல்
x
கடந்த 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ஐ.பி.எல் போட்டிகள் முறையே தென்னாப்பிரிக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால், ஐ.பி.எல். போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றுப்படலாம் என தெரிகிறது. ஆனால், இந்த முடிவுக்கு ஐ.பி.எல். அணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிநாடுகளில் போட்டி நடத்தினால், கூடுதல் செலவு ஏற்படும் என கூறியுள்ளன. ஐ.பி.எல். போட்டியை முன் கூட்டியே நடத்துவது மற்றும் முக்கிய தலைவர்களின் முக்கிய பிரச்சார நாளில்  போட்டியை நடத்தாமல் இருப்பது போன்ற யோசனைகளை பி.சி.சி.ஐ. ஆலோசித்து வருகிறது. அது கைகூடாவிட்டால்,  வெளிநாட்டுக்கு மாற்றப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்