"புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்" - யுவராஜ் சிங் வேண்டுகோள்
புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை பெற உதவுமாறு பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை பெற உதவுமாறு பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்றைய தினம் தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடிய அவர், 25 புற்று நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் போவதாக உறுதி ஏற்று கொண்டார். புற்று நோயாளிகளுக்கு உதவும் வகையில் அவர் வைத்துள்ள, 'யூ வி கேன்' என்ற தொண்டு நிறுவனத்திற்கு தங்களால் முடிந்த அளவிற்கு பணத்தை அனுப்புமாறு அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story