இந்திய வீரர்களுக்கு மாட்டு இறைச்சி வேண்டாம் - பிசிசிஐ கோரிக்கை

இந்திய வீரர்களுக்கு மாட்டு இறைச்சி வழங்க வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வீரர்களுக்கு மாட்டு இறைச்சி வேண்டாம் - பிசிசிஐ கோரிக்கை
x
இந்திய வீரர்களுக்கு மாட்டு இறைச்சி வழங்க வேண்டாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இப்பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் மாட்டு இறைச்சியை நீக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்னதாக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வழங்கப்பட்ட அசைவ உணவுகளால் வீரர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே மாட்டு இறைச்சியை வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்