விராட் கோலியின் சதம் வீண் - 43 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணி வெற்றி

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
விராட் கோலியின் சதம் வீண் - 43 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணி வெற்றி
x
* புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 95 ரன்கள் எடுத்தார்.

* இதனை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் விராட் கோலி சதம் விளாசிய போதிலும் இந்திய அணி 47 புள்ளி 4 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் மேற்கு இந்திய தீவுகள் அணி 43 ரன்கள் வித்யாசத்தில்  வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேற்கு இந்திய தீவுகள் அணி 1 க்கு 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்