கால்பந்து வீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து வீரர் ரொனால்டோ மீது பாலியல் புகார்
x
கெத்ரின் என்ற பெண் இது தொடர்பாக அமெரிக்கவின் NEVADA நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் லாஸ் வெகாஸ் நகரின் ஹோட்டல் ஒன்றில் ரொனால்டோ தம்மை பாலியல் பலாத்காரம் செய்தததாக அந்த பெண் கூறியுள்ளார். 

திட்டவட்டமாக மறுத்த ரொனால்டோ:



தம் மீதான பாலியல் புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ள ரொனால்டோ, பலாத்காரம் என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அதற்கு தாம் எதிரானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். விளம்பரத்திற்காக அந்த பெண் இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் ரொனால்டோ கூறியுள்ளார். 

போர்ச்சுக்கல் அணியிலிருந்து ரொனால்டோ நீக்கம் :

இந்த நிலையில், நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்கும் போர்ச்சுக்கல் அணியில் ரொனால்டோவின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரொனால்டோ மீதான புகார் கவலை அளிப்பதாக அவரை விளம்பர தூதராக நியமித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்