ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி - தமிழக வீர்ர்கள் சாதனை
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் சீர்காழியை சேர்ந்த மாற்று திறனாளி வீரர் விமல் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
முதலாவது ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்த 300 வீர்ர்கள் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 180 சிலம்பாட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். தனிநபர் பிரிவில் சீர்காழியை சேர்ந்த மாற்று திறனாளி வீரர் விமல் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சென்னை செவன் டு செவன் சிலம்பாட்ட கழகம் முதலிடத்தையும், சீர்காழியை சேர்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்ட கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
Next Story