இந்தியா VS இங்கிலாந்து - 3வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா VS இங்கிலாந்து - 3வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை
x
இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.நாட்டிங்காமில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து,307 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 97 ரன்களும்,ரஹானே 81 ரன்களும் எடுத்தனர்.இதனை அடுத்து  இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 38 புள்ளி 2 ஓவர்களில்,161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தற்போது வரை 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா களத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்