இந்திய ஒருநாள் போட்டிகளின் முதல் கேப்டன் காலமானார்
இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் முதல் கேப்டனான அஜித் வடேகர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உயிரிழந்தார்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் முதல் கேப்டனான அஜித் வடேகர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உயிரிழந்தார். அஜித் வடேகர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 ஆயிரத்து 113 ரன்கள் குவித்துள்ளார். பத்ம ஸ்ரீ, வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு, பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார்.
Next Story