இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி- இந்திய அணி 107 ரன்களில் சுருண்டது

லண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், 2வது நாளில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி- இந்திய அணி 107 ரன்களில் சுருண்டது
x
லண்டனில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில், 2வது நாளில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலே விஜய் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் 8 ரன்களில் வெளியேறினார். டெஸ்ட் போட்டிக்கு உரிய பாணியில் விளையாடிய புஜாரா கோலியின் தவறால் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

இங்கிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கோலி, ரஹானே, பாண்டியா, கார்த்திக் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். அஸ்வின் மட்டும் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுக்க, இந்திய அணி 107 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Next Story

மேலும் செய்திகள்