டி.என்.பி.எல் கிரிக்கெட் குவாலிபயர் -1 - மதுரையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது, திண்டுக்கல்

டி.என்.பி.எல் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில், மதுரை அணியை வீழ்த்தி, திண்டுக்கல் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
டி.என்.பி.எல் கிரிக்கெட் குவாலிபயர் -1 - மதுரையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது, திண்டுக்கல்
x
நத்தம் என்.பி.ஆர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி  6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து, இமாலய இலக்கை நோக்கி, களமிறங்கிய மதுரை அணி, 3 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே, 128 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்