டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : மதுரை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், காஞ்சிபுரம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : மதுரை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் மதுரை அணியும், காஞ்சிபுரம்  அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற காஞ்சிபுரம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய மதுரை அணி  20 ஒவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.  168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காஞ்சிபுரம் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம்  11 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை  அணி வெற்றி பெற்றது. 

"வெற்றி பெரும் உத்வேகத்துடன் உள்ளோம்" - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் நம்பிக்கை

இதனிடையே, டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், கோவை கிங்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது.  கோவை அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வெற்றி பெரும் உத்வேகத்துடன் இருப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்