டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - காஞ்சியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி

டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - காஞ்சியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி
டி.என்.பி.எல். இருபது ஓவர் தொடர் லீக் ஆட்டம் - காஞ்சியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தூத்துக்குடி
x
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில், காஞ்சிபுரம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற தூத்துக்குடி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கௌசிக் காந்தி அதிரடியாக விளையாடி 111 ரன்கள் குவித்ததால், அந்த அணி இருபது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. 

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய காஞ்சிபுரம் அணியின் விஷால், மற்றும் பாபா அப்ரஜித் தலா 33 ரன்கள் சேர்த்து முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் காஞ்சிபுரம் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 


Next Story

மேலும் செய்திகள்