உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா அபாரம்

உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டிக்கு குரோஷியா அணி முன்னேறியது.
உலக கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா அபாரம்
x
நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை குரோஷியா அணி எதிர் கொண்டது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிய்ரன் டிரிப்பர் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், குரோஷியா வீரர்கள் கடுமையாக  போராடினர். 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடிக்க, இரு அணிகளும் 1-1 என சம நிலை அடைந்தன. 

இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட் சுசிக் ஒரு கோல் அடித்தார். இதனால், இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் குரோஷியா அணி நுழைந்தது.

Next Story

மேலும் செய்திகள்