மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானை 72 ரன்களில் சுருட்டிய இந்திய அணி

மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது.
மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி - பாகிஸ்தானை 72 ரன்களில் சுருட்டிய இந்திய அணி
x

மகளிருக்கான ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது. கோலாலம்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி வெற்றி இலக்கை 16 புள்ளி 1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 


Next Story

மேலும் செய்திகள்