``10 ஆண்டு காலமாக பிரதமர் மோடி ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துள்ளார்'' - கருப்பு முருகானந்தம்

x

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். புதுப்பட்டி, பூதலூர், நால்ரோடு, கோவில்பத்து, விண்ணமங்கலம், ஒரத்தூர், கடமங்குடி, இந்தலூர், சோழங்கம்பட்டி, மராநேரி, அய்யனாபுரம், புங்கனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் 10 ஆண்டு காலமாக பிரதமர் மோடி ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்து வருவதாகவும், தன்னை வெற்றி பெறச் செய்து எம்.பியாக்கினால் தொகுதிக்கான அனைத்து தேவைகளையும் செய்து தருவேன் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்