தொழுகை முடித்து வந்தவர்களிடம் போட்டி போட்டு வாக்கு கேட்ட திமுக, அதிமுகவினர்

x

புதுக்கோட்டையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி, சிறப்பு தொழுகை முடித்து வெளியே வருபவர்களிடம் அதிமுக மற்றும் திமுகவினர் வாக்கு சேகரித்தனர். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஈத் கா பள்ளிவாசலில் இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிறப்பு தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் கருப்பையா, தனது ஆதரவாளர்களோடு வாக்கு சேகரித்தார். இதே போல், மற்றொரு பக்கம் நின்று, மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்