"வடசென்னையை தென்சென்னைக்கு இணையாக மாற்றிக் காட்டுவேன்" - வாக்குறுதி கொடுத்த அதிமுக வேட்பாளர்

x

வடசென்னையை தென்சென்னைக்கு இணையாக மாற்றிக் காட்டுவேன் என வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ வாக்குறுதி அளித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூரில் வீதி வீதியாக ராயபுரம் மனோ பிரசாரத்தில் ஈடுபட்டார். பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜேசிபி எந்திரம் மூலம் ரோஜா இதழ்களை கொட்டியும், பூசணிக்காய் உடைத்தும் தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனோ, வடசென்னையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவேன் எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்