பணம் இல்லாததால் போட்டியிடவில்லை... நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு ஜி.கே.வாசன் சொன்ன கருத்து

x

பணம் இல்லாததால், தேர்தலில் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியது, அவரது நேர்மையை காட்டுகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பணம் இல்லாததால், தேர்தலில் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியது, அவரது நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை காட்டுகிறது என தெரிவித்தார். மேலும், "எங்களை பொறுத்தவரை கல்லை பற்றியோ, பல்லை பற்றியோ கவலை இல்லை... சொல்லை பற்றி மட்டும் தான் கவலை... பிரதமர் மோடி, செல்லை காப்பாற்றக்கூடியவர்" என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்