மகளிர் உரிமைத்தொகை... நாமக்கல் அதிமுக வேட்பாளர் கொடுத்த வாக்குறுதி

x

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுச்சத்திரம் அருகே கோவிந்தம்பாளையம், கண்ணூர்பட்டி, திருமலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மக்களிடம் பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தி தரப்படும் என்றும், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்