ஹெலிகாப்டர் தளத்திலிருந்து அண்ணாமலை பொதுக்கூட்டத்துக்கு மோடி எப்படி வருவார்?

x

திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வருவதையொட்டி, பிரதமர் வரவுள்ள ஹெலிகாப்டரை தரையிறக்கும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில், வரும் 27-ம் தேதி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவும், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நடைபெறவுள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். பிரதமர் மோடி, சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்கும் வகையில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் வரவுள்ள ஹெலிகாப்டரை தரையிறக்கும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்