சென்னை வந்த மணிப்பூர் விளையாட்டு வீரர்கள்... அமைச்சர் உதயநிதி போட்ட ட்வீட்

x

முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று, மணிப்பூர் விளையாட்டு வீரர்கள், சென்னை வந்ததாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மணிப்பூரில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால், அம்மாநில விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற சாதகமற்ற சூழ்நிலை உள்ளதாக கூறியுள்ளார். இதனை கருத்தில் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள அழைப்பு விடுத்ததாக கூறியுள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று விருப்பம் தெரிவித்த10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள், 2 பயிற்சியாளர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைத்து வந்ததாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்