பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி... கொதித்தெழுந்த சிறுமியின் பெற்றோர்

x

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவில் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வரும் எம்.எஸ்.ஷா என்பவர், திருமங்கலம் பகுதியில் தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இதனிடையே, 15 வயதான பள்ளி மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், இருசக்கர வாகனம் வாங்கித் தருவதாகக் கூறி, பாஜக நிர்வாகி ஷா, தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்