அண்ணா இல்லைனா, அண்ணாமலை ஆடு தான் மேய்க்கனும்.. எரிமலையாய் வெடித்த ஆர்.எஸ்.பாரதி

x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியவில்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநதி சிலைகள் முன்பு வைக்கப்பட்ட பெரியார் திருவுருவப்படம் முன்பு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, அண்ணா மட்டும் பிறக்காமல் இருந்திருந்தால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்துக் கொண்டிருப்பார் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்