"நான் வெற்றி பெற்றால் முதல் வேலை..." - திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் முகமது முபாரக்

x

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக் பழனியில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். ஆயக்குடி, கணக்கன்பட்டி, கோம்பைபட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து தன்னை வெற்றி பெறச் செய்து டெல்லிக்கு அனுப்புங்கள் என கூறினார். ஆயக்குடியில் குளிர் பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்