புதுமண தம்பதியிடம் வாக்கு சேகரிப்பு - அசர வைத்த தங்கரின் அட்வைஸ்...சுவாரஸ்யம் தருணம்

x

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் திருவந்திபுரம், கே.என்.பேட்டை, எம்.புதூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவந்திபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தபோது புதுமணத் தம்பதியினர் திருமண மண்டபத்தை விட்டு வெளியில் வந்தனர். அவர்களிடம் வாக்கு சேகரித்த தங்கர்பச்சான்,10 கார், 10 வீடு இருந்தாலும் சந்தோஷமாக வாழ முடியாது, ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ வேண்டும் என அறிவுரை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்