பாஜகவுடன் இழுபறி.. கூட்டணி சேருமா தமாகா? | BJP | TMC |

x

பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பாஜக மற்றும் தமாகா இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், 3 மக்களவை தொகுதிகளையும், 1 மாநிலங்களை உறுப்பினர் பதவியையும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜகவோ, 2 மக்களவை தொகுதிகளை மட்டுமே தர முன் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொகுதி பங்கீடு கையெழுத்தாகாமலேயே, ஜி.கே. வாசன் கமலாலயத்திலிருந்து புறப்பட்டார். அப்போது அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, விரைவில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்