துக்கத்தில் இருந்த அதிமுக நிர்வாகி - நேரில் சென்று ஆறுதல் தந்த ஈபிஎஸ்

x

துக்க நிகழ்வுகள் நடந்த அதிமுக நிர்வாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். அதிமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராமின் தாயார் வயது மூப்பின் காரணமாக, அண்மையில் காலமானார். சென்னை அசோக் நகரில் உள்ள ஆதிராஜாராமின் வீட்டிற்கு இன்று நேரில் சென்ற ஈபிஎஸ், அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். திருவொற்றியூரில், முன்னாள் எம்எல்ஏ குப்பனின் வீட்டிற்கு சென்ற ஈபிஎஸ், மறைந்த குப்பனின் மகள் மோகனின் படத்தை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்