"அரசியலமைப்பு சட்டத்தை திருத்தவும்" - பாமக நிறுவனர் ராமதாஸ்
மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக....
"அரசியலமைப்பு சட்டத்தை திருத்தவும்" - பாமக நிறுவனர் ராமதாஸ்
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக புள்ளிவிவரங்களைத் திரட்ட மத்திய அரசு ஆணையிட்டிருப்பது, வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார். ஓபிசி பிரிவினருக்கும், மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு குறைவாகவே பிரதிநிதித்துவம் தரப்படுவதாக புள்ளி விவரங்களை சுட்டிக் காட்டியுள்ள ராமதாஸ், பதவி உயர்வில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.
Next Story