வேட்புமனு பரிசீலனையின் போது கூச்சலிட்ட படி நகராட்சி அலுவலகத்தில் நுழைந்த அதிமுக பிரமுகரால் பரபரப்பு
தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனையின் போது நுழைந்த அதிமுக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனையின் போது நுழைந்த அதிமுக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது. போடிநாயக்கனூர் நகராட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேட்புமனு பரிசீலனையின் போது அதிமுக பிரமுகர் ஒருவர் கூச்சலிட்ட படி நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தார். இதனையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற்றினர்.
Next Story