வயதான சொந்த தாயை கைவிட்டவர் சித்து - பஞ்சாப் தேர்தல் களம் - சித்துவும், சர்ச்சையும்

தந்தை இறந்த பிறகு வயதான தனது தாயை சித்து கைவிட்டதாக காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது அவரது சகோதரி குற்றம்சாட்டினார்.
x
பஞ்சாப் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது அவரது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

அமெரிக்காவில் இருந்து திரும்பியுள்ள சித்துவின் சகோதரி சுமன் டூர், 1986 ஆம் ஆண்டு தனது தந்தை இறந்த பிறகு வயதான தனது தாயை சித்து கைவிட்டதாகவும், அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு டெல்லி ரயில்வே நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் தனது தாய் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்