பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்தை சந்தித்த சித்து - ராஜினாமாவை திரும்ப பெறுவார் என தகவல்

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், முதல்வர் சரண்ஜித் சன்னியை, நவ்ஜோத் சிங் சித்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்தை சந்தித்த சித்து - ராஜினாமாவை திரும்ப பெறுவார் என தகவல்
x
பஞ்சாப் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய சித்துவை சமாதானம் செய்யும் முயற்சியில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தீவிரம் காட்டி வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த கேட்பன் அமரீந்தர் சிங்கிற்கும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ்  மேலிட அழுத்தம் காரணமாக அமரீந்தர் சிங் பதவி விலகியதை அடுத்து, சித்துவின் ஆதரவாளர்களும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இந்நிலையில் முதல்வர் சரண்ஜித் சிங்கை, சித்து சந்தித்ததால், அவர் ராஜினாமாவை திரும்ப பெறுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.




Next Story

மேலும் செய்திகள்