"தேமுதிக தனித்து போட்டி" - கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள், நாளை மற்றும் நாளை மறுநாள் அந்தந்த மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 4000 ரூபாயும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 2000 ரூபாயும் கட்ட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்