கொல்கத்தாவில் மம்தா பிரசாரம் ரத்து - டெரிக் ஓ பிரையன்

கொரோனா பரவலால் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் பிரசார திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் மம்தா பிரசாரம் ரத்து - டெரிக் ஓ பிரையன்
x
கொரோனா பரவலால் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் பிரசார திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலால் தான் பங்கேற்க இருந்த பிரசார கூட்டங்களை ரத்து செய்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  அறிவித்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பங்கேற்க இருந்த  பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் அறிவித்தார். கடைசி நாள் பிரசாரத்தில் மட்டும் ஒரு கூட்டம் நடைபெறும் எனவும், இதைதவிர மற்ற மாவட்டங்களில் மம்தா 30 நிமிடங்கள் வீதம் பிரசாரத்தில் ஈடுபடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்