"பாஜக தூண்டுதல் காரணமாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்" - மம்தா பானர்ஜி பிரசாரத்தில் பேச்சு

தேர்தல் ஆணையம் அனுப்பும் நோட்டீஸ்களுக்கு எல்லாம் கவலைப்பட மாட்டேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
பாஜக தூண்டுதல் காரணமாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் - மம்தா பானர்ஜி பிரசாரத்தில் பேச்சு
x
"பாஜக தூண்டுதல் காரணமாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்" - மம்தா பானர்ஜி பிரசாரத்தில் பேச்சு 

தேர்தல் ஆணையம் அனுப்பும் நோட்டீஸ்களுக்கு எல்லாம் கவலைப்பட மாட்டேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் இரு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மம்தா பானர்ஜி ஜமால்பூர் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது பாஜகவுக்காக மத்திய படையினர் வேலை செய்வதை நிறுத்தும் வரையில் இப்படிதான் பேசுவேன், அவர்கள் அதை நிறுத்துகிறார்களோ அப்போது அவர்களுக்கு சல்யூட் அடிப்பேன் எனக் கூறியுள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் பாஜகவின் தூண்டுதலின் பெயரில் செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிகள் மீறல் இல்லையா? எனக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்