புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்றி... "வளமான புதுச்சேரி அமைய வாழ்த்துகிறேன்"

துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்.
x
துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார். மாநில மக்களுக்கும்,  உடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பு மற்றும் தார்மீக பொறுப்பை நிறைவேற்ற தானாற்றிய பணிகள் அனைத்தும் புனிதமானவை எனக் கூறியிருக்கிறார். புதுச்சேரிக்கு பிரகாசமான எதிர்க்காலம் உள்ளது என்றும் அது மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் கூறியிருக்கும் அவர், வளமான புதுச்சேரி அமைய வாழ்த்துவதாக கூறியிருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்