"புதுச்சேரியில் கொரோனா அதிகரித்தால் முதல்வர் மீது வழக்கு" - புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரித்தால் முதலமைச்சர் நாராயணசாமி மீது வழக்கு தொடரப்படும் என அந்த மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா அதிகரித்தால் முதல்வர் மீது வழக்கு - புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்
x
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரித்தால் முதலமைச்சர் நாராயணசாமி மீது வழக்கு தொடரப்படும் என அந்த மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். அந்த மாநில பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏவும், அக்கட்சியின் தலைவருமான சாமிநாதன், காங்கிரஸ் இல்லா புதுச்சேரி என்ற தலைப்பில் ஏ.எப்.டி மைதானத்தில் வரும் 3 ஆம் தேதி பொது கூட்டம் நடைபெற உள்ளதாக கூறினார்.  புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நகர் பகுதி முழுவதும் தடுப்புகள் வைத்து தடுத்து இருப்பது சட்ட விரோதமானது என்றும், ஜனவரியில் கொரோனா அதிகரித்தால் முதல்வர் நாராயணசாமி மீது வழக்கு தொடரப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்