ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

ஐதராபாத் மாநகராட்சி, தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரசாரம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வருகிற ஒன்றாம் மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி பாஜகவின் முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்திறங்கிய மத்திய அமைச்சர் அமித்ஷா, செகந்திராபாத்தில் உள்ள வரசிகுடா என்னும் இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்டார். அவருக்கு வழி நெடுகிலும், பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அமித்ஷா வருகையை ஒட்டி, அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்