சீனா நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது - சீன விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் விமர்சனம்
சீனா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதை டுவிட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
சீனா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதை டுவிட்டரில் பதிவிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எல்லையில் சீனா நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது உண்மையாகும் என்றும் மத்திய அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதனை அனுமதித்துள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார். மோகன் பகவத்திற்கு உண்மை தெரிந்து உள்ளது. எனவே அதனை எப்படி எதிர்க்கொள்வது என அச்சம் அடைந்து உள்ளார் என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Next Story