"வேளாண் மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினேன்" - திருச்சி சிவா

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடக்கவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
x
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு, முறையாக நடக்கவில்லை என்று,திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  12 கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ்  தன்னிச்சையாக செயல்பட்டார் என்று, என்று கூறினார். அதனால் தான் சிலர் உணர்ச்சி வசப்பட்டு மைக் உடைப்பு உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபட்டதாக கூறினார். இன்று அவை கண்ணியமாக நடைபெறவில்லை திருச்சி சிவா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்