"கொரோனா பரவல்...தவறான தகவல் கூடாது" - புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர் வலியுறுத்தல்

கொரோனா பரவல் குறித்து தவறான தகவல்களை புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிடக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரவல்...தவறான தகவல் கூடாது - புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர் வலியுறுத்தல்
x
கொரோனா பரவல் குறித்து தவறான தகவல்களை புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிடக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் மேலும் ஒரு ஊழியருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக கூறினார். இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தவறான தகவலை பரப்பக் கூடாது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்