"காயமடைந்த ராணுவ வீரர்களின் நிலை என்ன ?" : பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்தது எப்படி என்பதை பிரதமர் மோடி, நாட்டுக்கு சொல்ல வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காயமடைந்த ராணுவ வீரர்களின் நிலை என்ன ? : பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும் - சோனியா காந்தி வலியுறுத்தல்
x
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்தது எப்படி என்பதை பிரதமர் மோடி, நாட்டுக்கு சொல்ல வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். சீன விவகாரம் குறித்து, டெல்லியில் பேசிய அவர், 20 ராணுவ வீரர்களின் தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாக கூறியுள்ளார். வீரர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். காணாமல் போன வீரர்களின் நிலை என்ன, சீனா எந்த பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது, இதனை சமாளிக்க மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்