கேரளாவில் புதிதாக 62 பேருக்கு தொற்று பாதிப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் புதிதாக 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் புதிதாக 62 பேருக்கு தொற்று பாதிப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
x
தொற்று உறுதி செய்யப்பட்ட 62 பேரில் 56 பேர் வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்த வந்தவர்கள் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இதுவரை 565 குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 577 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மாநிலத்தில், இதுவரை 62 ஆயிரத்து 746 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்து பார்க்கப்பட்டதில் 60 ஆயிரத்து 448 பேருக்கு தொற்று  இல்லை என தெரிய வந்து உள்ளதாகவும், பல்வேறு மாவட்டங்களில், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து  167 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்