ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது எழும்பூர் நீதிமன்றம்

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது எழும்பூர் நீதிமன்றம்
x
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளதென, அவர் மீது திருவல்லிக்கேணி போலீசில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் கொடுத்தார். ஆனால் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உமாபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை,  மனுவை தள்ளுபடி செய்ததுடன், தனிப்பட்ட முறையில் ரஜினிக்கு எதிராக புதிய மனுத்தாக்கல் செய்ய, மனுத்தாரருக்கு அனுமதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்