அரசு கல்வெட்டில் இரட்டை இலை சின்னம் - அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்ததால் சர்ச்சை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
அரசு கல்வெட்டில் இரட்டை இலை சின்னம் - அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்ததால் சர்ச்சை
x
சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் அருகே  நெல்முடிக்கரையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் செல்லூர் ராஜூ, பங்கேற்று ஆயிரத்து 639 பயனாளிகளுக்கு 5 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். விழாவில் கல்வெட்டின் மேற்பகுதியில் அதிமுக கட்சி சின்னமான இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. அரசு செலவில் நடைபெற்ற விழாவில், தனிப்பட்ட கட்சி சின்னத்தை பொருத்தியிருப்பது நியாயமற்றது என, திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்